தேடுக

Wednesday, 26 March 2014

கல்லூரியில் கிடைத்த முதல் அங்கீகாரம்...


முடிந்துவிட்டது...அது முடிந்து 20 நாட்கள் ஆகின்றன.இன்னும் அந்த பிரம்மிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை!!கல்லூரியில் எங்கள் சாரல் தமிழ் மன்றம் சார்பாக நாங்கள் அரங்கேற்றிய முதல் நாடகம்!! வெறித்தனமான முயற்சிகளுடன் வெற்றிகரமாக முடிந்தது! என் பெயர் என்னவென்று எனக்கு மறந்தேவிட்டது. நந்திதா என்று ஏதோ வரும். பார்ப்பவர் எல்லாம் பாரூ மாமி என்றே அழைத்தால் என் பெயர் எப்படி எனக்கு நினைவிருக்கும்?? ஆனால் இதுதானே எனக்குப் பெருமை!! நான் ஒரு டே ஸ்காலர். தினமும் ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் நான் இரவு எட்டு மணிக்குதான் திரும்புவேன் என்று கூறினேன் ஒரு நாள்.. அன்று எனக்கு அடி விழாமல் தப்பித்தது நான் செய்த பெரும் பாக்கியம்!!
நாடகத்தில் நடித்தே தீரவேண்டும் என்ற வெறி.அனைவரின் எதிர்ப்பையும் மீற வைத்தது. காவிரியைக் கல்லணை தடுப்பது நன்மைக்குத்தான் என்றாலும் காவிரியால் கல்லணையைத் தாண்டி ஓட முடியாது. என் கல்லணை பெல்ஜியம் சென்றிருக்கிறது என்ற திமிரில் அவளது போன் காலையும் மதிக்காமல் நாடகப் பயிற்சியைத் துவங்கினேன். வீட்டார் தடுத்து ஓய்ந்துவிட்டார்கள். வீசும் காற்றுக்கு யார்தான் விலங்கிட முடியும்?சரியாக ஒரு மாத உழைப்பு. இறுதியாக மார்ச் 10 அன்று அரங்கேறியது எங்கள் நாடகம். ஏகத்துக்கும் ஆரவாரம்! எனக்கும் எங்கள் சாரல் கூத்துப் பட்டறைக்கும் கிடைத்த முதல் மற்றும் மிகப்பெரிய அங்கீகாரம் இது.
பெருமையாகவும் கொஞ்சம் பயமாகவும் உள்ளது. இனி வரும் நாடகங்களில் எகிறும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியுமா?? தெரியவில்லை. ஆனால் முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது!! இந்த நாடகத்திற்கு என் சார்பில் பெரிதாக எதுவும் கிழிக்கவில்லை என்றாலும் இனி வரும் நாட்களில் சாரல் கூத்துப் பட்டறைக்கு என் பங்களிப்பைப் பெரிதளவில் தர முயற்சிகிறேன்!!
எங்கள் நாடகத்திற்கு வந்து எங்களை ஊக்குவித்துப் பெருமை படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்! இதைத் தவிர வேறு வார்த்தை எழவில்லை!!

விரைவில் சந்திப்போம்!

2 comments:

  1. etho panniya nanditha u rocked d that drama was awesome.hats off to everyone :)

    ReplyDelete
  2. என் கல்லணை பெல்ஜியம் சென்றிருக்கிறது -- Oh my gOD..!! sO much of SISter love..! <3

    ReplyDelete